நாட்டிங்ஹம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹம் நகரில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இரண்டாவது போட்டியில் மழை ஆதிக்கம் செலுத்தி போட்டியின் போக்கை மாற்றியது போல, மூன்றாவது போட்டியிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, முதல் நாள் முழுவதும் மழையால் தடைபட்டது. இரண்டாவது நாள் மழையால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். 107 ரன்களில் முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் இந்திய வேகப்பந்து வீச்சில் முதல் 5 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதே போல, போட்டி முழுவதும் சுழல் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.