Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வால் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு.. ஐசிசி விதிகள் சொல்வது என்ன? புதிய விளக்கம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஐசிசி தண்டனை விதிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 17 வது ஓவரில் இந்தச் சர்ச்சை அரங்கேறியது.

அசிதா பெர்னாண்டோ வீசிய பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆத்திரமடைந்த பெர்னாண்டோ, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷார்ட் பிட்ச் பந்தாக வீசினார். அதில் ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த போது துரதிர்ஷ்டவசமாக போல்டாகி வெளியேறினார்.

Will Yashasvi Jaiswal be banned Here Is What ICC Rules Say on Physical altercation

அப்போது அசிதா ஆக்ரோஷமாகப் பேசியதால், பெவிலியன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால் திடீரெனத் திரும்பி அசிதா பெர்னாண்டோவை நோக்கிச் சென்றார். இருவரும் நேருக்கு நேர் மோதி, ஒருவரையொருவர் முட்டிக்கொண்டனர். நிலைமை மோசமடைவதைத் தடுக்க இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் பிரித்து வைத்தார். இந்த சம்பவத்தால் ஜெய்ஸ்வாலுக்கு சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில், ஐசிசி விதிப்படி அவர் சிறிய தண்டனையுடன் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.12 இன் படி, மைதானத்தில் சக வீரர்களுடன் தேவையற்ற முறையில் உடல்ரீதியான தொடுதல்களை ஏற்படுத்துவது 'லெவல் 1' அல்லது 'லெவல் 2' விதிமீறலின் கீழ் வரும். மேலும் பிரிவு 2.13 இன் படி, சக வீரர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் தண்டனைக்குரியது.

அதன்படி, ஜெய்ஸ்வால் மற்றும் பெர்னாண்டோ இருவர் மீதும் 'லெவல் 1' அல்லது 'லெவல் 2' பிரிவின் கீழ் போட்டி நடுவர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இதில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்படலாம் அல்லது வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இரு வீரர்கள் மீதும் இதற்கு முன்பு ஒழுங்குமுறை புகார்கள் எதுவும் இல்லாததால், இவர்களுக்குப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

குல்தீப் யாதவ் பற்றி கேள்வி கேட்டவுடன் கொந்தளித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்

குல்தீப் யாதவ் பற்றி கேள்வி கேட்டவுடன் கொந்தளித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "ஆட்டத்தின் பதற்றமான தருணத்தில் பெர்னாண்டோ ஏதேனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஜெய்ஸ்வால் அந்த அளவிற்கு அருகில் சென்றிருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து பவுலர் பிரைடன் கார்ஸ் கையில் விலங்கு மாட்டி கைது.. உடன் நின்ற பென் ஸ்டோக்ஸ்

Also Read

இங்கிலாந்து பவுலர் பிரைடன் கார்ஸ் கையில் விலங்கு மாட்டி கைது.. உடன் நின்ற பென் ஸ்டோக்ஸ்
Story first published: Monday, August 24, 2026, 11:13 [IST]
Other articles published on Aug 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+