
அதிகரித்த சந்தேகங்கள்
ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் பல இடங்களில் ரத்தக்கறைகள் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனினும் அது முதலுதவி அளிக்கப்பட்ட போது, ரத்த வாந்தி எடுத்தார் என அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்தனர். மேலும் வார்னே உடல் எடையை குறைப்பதற்காக இருந்த கடினமான டயட்களும் மாரடைப்புக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

அடையாளம் தெரியாத பெண்
இதனையடுத்து அவரின் உடலை பரிசோதிக்க நேற்று கோ சாமுய் தீவில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸின் பின் புறம் ஒரு தாய்லாந்து பெண்ணும், அயல்நாட்டு பெண் ஒருவரும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி, மருத்துவமனை வளாகத்தில் அந்த பெண்ணை சுற்றி வளைத்தனர்.

கடைசியில் என்ன ஆனது
அதன்பின்னர் தான், அந்த பெண் வார்னேவுக்கு தெரிந்தவர் என்றும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வந்ததாகவும் தெரியவந்தது. அவருடன் இருந்த தாய்லாந்து பெண் உதவியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பெண் வார்னே உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குள் ஒரு நிமிடம் இருக்க அனுமதிக்கப்பட்டார். ஒரு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அனுப்பி வைக்கப்பட்டார்.
Recommended Video

வெளியான உண்மை
இப்படி ஒரு பரபரப்பு நடந்து முடிந்த நிலையில், ஷேன் வார்னே இயற்கையாக தான் உயிரிழந்துள்ளார் மருத்துவர்கள் அடாப்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதனையடுத்து வார்னேவின் உடல் பாங்காக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











