ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபாலி வர்மாவும் இடம்பிடிப்பு
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை அணியில் ரிச்சா கோஷ் என்ற வீராங்கனை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல முதல்முறையாக ஐசிசி தொடரில் சபாலி சர்மாவும் இடம்பிடித்துள்ளார்.
குரூப் பி அணியில் பாகிஸ்தான்
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசமும் இதேபோல பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.
மகளிர் அணி அறிவிப்பு
இதனிடையே ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா பங்கேற்கும் 3 அணிகள் தொடருக்கான 16 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை நுசாத் பர்வீனும் இடம்பெற்றுள்ளார்.
இந்த மகளிர் அணி
உலக டி20 தொடருக்கான மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தனியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.