எதிர்பார்ப்பு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. கோலி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். தோனி 4வது முறையாக உலகக்கோப்பையில் களம் காண்கிறார். தோனி விக்கெட் கீப்பராக விளையாட உள்ள நிலையில் 2 வது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரிஷப் பண்ட் தேவை
இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் தேவை என்ற எண்ணம் ரசிகர்களிடையே மட்டும் அல்லாமல் தேர்வுகுழுவினரிடமும் இருந்துள்ளது. அவரை 2வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் தேர்வு செய்யவில்லை என்றாலும் அவரை 4வது வரிசை பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருக்கலாம் என்பதே பலரது எண்ணம். ஏனெனில் இந்திய அணியை பொறுத்தளவில் 4வது வரிசைக்கு ரிஷப் பண்ட் போன்ற இளம் அதிரடி வீரர் தேவை என்ற நிலையே உள்ளது.
கவாஸ்கர் அதிர்ச்சி
இந்த காரணங்கள் மட்டுமல்லாது ஆட்டத்தின் கடைசி ஓவரான டெத் ஓவர் என்று அழைக்கப்படும் இறுதி நிமிடங்களில் மிகத் திறமையாக விளையாடக் கூடியவர் ரிஷப் பண்ட் என்ற கருத்தும் உள்ளது. எதிர்காலத்திலும் ரிஷப் - பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யாதது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்து உள்ளார். இவரைப் போலவே பலரும் ரிஷப் பண்ட்-ஐ உலக கோப்பைக்கு தேர்வு செய்யாமல் விட்டது தேர்வுக் குழுவின் மிகப்பெரிய தவறு என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்வு குழு விளக்கம்
அதே வேளையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஏன் தேர்வு செய்தோம் என்று தேர்வு குழுவின் தலைவர் எம்.எஸ்.கே., பிரசாத் கூறுகையில் ரிஷப் பண்ட் திறமையான வீரர் அதில் மாற்றுக் கருத்து இல்லை அதே வேளையில் அவருக்கு இன்னும் நேரம் உள்ளது. அவர் தற்போதைய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதே நேரம் நெருக்கடியான நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பான செயல்படுவதை பார்க்க முடிந்தது. அதனால் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம்.' என்று கூறியுள்ளார்