லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் நாளை (மே 25) மற்றும் மே 28 தேதிகளில் பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளது. அதன் பின் லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

அதற்கான திட்டமிடல்களில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக 1983 உலகக்கோப்பை வெற்றியை பெற்றுக் கொடுத்த கேப்டன் கபில் தேவ் உடன் இருவரும் ஹோட்டல் ஒன்றில் கூடி பேசி இருப்பார்கள் போல தெரிகிறது.
அப்போது, எடுத்த புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 2-3 கோப்பைகளும் இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் ஹோட்டல் சென்றால்.. கோப்பைகள் எல்லாம் சகஜம் தான் என்றாலும், உலகக்"கோப்பை" பற்றி பேச வேண்டிய நேரத்தில் இது என்னப்பா வேற கோப்பை.. என நமக்கு திக் திக் என இருக்கிறது.
சரி.. ஏதாவது ஜூஸ் குடிச்சு உடம்பை தெம்பாக்கிட்டு பேசி இருப்பாங்க!!