இப்ப விட்டா அப்புறம் நேரமே கிடைக்காது.. அனுஷ்காவுடன் கோவாவுக்கு ஜாலி டூர் கிளம்பிய கோலி!!
கோவா : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோவாவில் தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
அடுத்து உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில், கிடைத்த சில நாட்கள் ஓய்வை பயன்படுத்தி கோவா சென்றுள்ளார் கோலி.

2019 ஐபிஎல் தொடர் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. சுமார் ஒன்றரை மாத ஐபிஎல் தொடர் முடிந்த இரு வாரங்களில் மே 30 முதல் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது.
இந்த இடைவெளியில், கோலி விளம்பர ஷூட்டிங்களில் சில நாட்கள் செலவிட்டார். இதன் பின், உலகக்கோப்பை தொடர் சுமார் ஒன்றரை மாதம் நடைபெறும். அப்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்பதால், கிடைத்த நேரத்தில் ஜாலி சுற்றுலாவாக கோவாவுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, கோலி - அனுஷ்கா சர்மா ரசிகர்கள் இடையே பரவி வருகிறது.
Story first published: Thursday, May 16, 2019, 12:39 [IST]
Other articles published on May 16, 2019


Click it and Unblock the Notifications