அடெலெய்ட்: இந்திய கிரிக்கெட் வீரரான அஜின்கியா ரெஹானே ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2015க்காக புதிய ஸ்போர்ட்ஸ் ஷூக்களை வாங்கியுள்ளார். இந்த ஷூக்களால் பேட்ஸ்மேனான ஓடி, ஓடி ரன்களைக் குவிக்க முடியும் என்கிறார் ரெஹானே.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிப்ரவரி 15 அன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.
— ajinkyarahane88 (@ajinkyarahane88) February 5, 2015
இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரெஹானே, இந்த புதிய ஷூக்களைப் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய புதிய நைக் கிரிக்கெட் ஷூக்களை வாங்கி விட்டேன். இது எனக்கு விளையாட்டின்போது திறமையாக விளையாட உதவும். ரன்களைக் குவிக்கவும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு டுவிட்டர் போஸ்டில் தன்னுடைய புதிய ஷூவுடன் போஸ் கொடுத்துள்ளார் ரெஹானே. ரெஹானேவிற்கு இதுதான் முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.