பிபா யு 17 கால்பந்து அரை இறுதியில் பிரேசில், ஸ்பெயின்
டெல்லி: பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு மாலி, இங்கிலாந்து அணிகளைத் தொடர்ந்து பிரேசில், ஸ்பெயின் அணிகள் முன்னேறின.
பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் பங்கேற்றன. இதில் மாலி, இங்கிலாந்து அணிகளைத் தொடர்ந்து, பிரேசில், ஸ்பெயின் அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின.

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்றது. பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியைும் வென்றன.
வரும் 25ல் நடக்கும் அரை இறுதிப் போட்டிகளில், பிரேசில் - இங்கிலாந்து அணிகளும், மாலி - ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன. வரும், 28ம் தேதி கோல்கத்தாவில் பைனல் போட்டி நடக்கிறது.

முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இந்தியா இடம்பெற்றிருந்த ஏ பிரிவில் இருந்து, கானா மற்றும் அமெரிக்கா, காலிறுதியில் வெளியேறின. கொலம்பியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
Story first published: Monday, October 23, 2017, 13:45 [IST]
Other articles published on Oct 23, 2017


Click it and Unblock the Notifications