
டிராவான ஆட்டம்
பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் குவித்து டிரா செய்தது. அதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

கேப்டன் கருத்து
இந்த முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சாதகமாக இல்லை
பைனலில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் விளையாடின.

குழப்பத்தில் வில்லியம்சன்
சமபலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றி தகுதியானவர்கள். போட்டி முடிந்ததும் நான் வில்லியம்சனிடம் பேசினேன். அவரும் குழப்பத்தில் தான் இருந்தார்.

இருந்தாலும் மகிழ்ச்சியே
உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்றதொரு பைனல் நடக்கவே இல்லை என்று சொல்லுவேன். மேலும் இது ஒரு சமமான போட்டி இல்லை. எது எப்படி இருந்தாலும் உலக கோப்பையை வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











