சென்னை : உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் டேவிட் மலனை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் ஏலம் 2021 நடைபெற்றுவரும் நிலையில் டேவிட் மலனை அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இதையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் அணிக்காக சிறப்பான ஆட்டங்களை தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 ஏலம் சென்னையில் சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகளும் பங்கேற்று தங்களது அணிக்காக ஏலத்தில் எடுத்து வருகிறது. முக்கியமான வீரர்களும் அடிப்படை விலையையொட்டி ஏலம் எடுக்கப்பட்டதும் முக்கியமான வீரர்கள் சிலர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் இந்த ஏலத்தில் காணப்பட்டது.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 போட்டிகளின் வீரரான இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மலன் அவரது ஆதார விலையான 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வரும் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்கு சிறப்பான ஆட்டங்களை தருவார் என்று எதிர்பார்க்கலாம்.