
குரூப் ஏ,பி
மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம்பெறுள்ளன.
குரூப் பி பிரிவில் ஜிம்பாப்வே, ஹாங்ஹாங், ஸ்காட்லாந்த், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளில் முதலிடம் பெறும் 2 அணிகள் சூப்பர் 10 குரூப்புடன் இணைந்து கொள்ளும்.

சூப்பர் 10 குரூப்
சூப்பர் 10 குரூப் 1-ல் இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளும் சூப்பர் 10 குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் உள்ளன. இந்த சூப்பர் 10-பிரிவுகளில் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

செமி பைனல், பைனல்
அரை இறுதிப் போட்டிகள் டெல்லி மற்றும் மும்பையில் மார்ச் 30, 31 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும்.

7 மைதானங்கள்
பெங்களூர், தர்மசாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், டெல்லி என 7 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் சாம்பியன் இந்தியா
2007ஆம் ஆண்டு முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2009-ல் பாகிஸ்தான்
2009 அம் ஆண்டு டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியனானது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தும் 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும் 2014ஆம் ஆண்டு இலங்கையும் சாம்பியன் பட்டம் வென்றன.

இந்தியா- பாக் மேட்ச்
தர்மசாலாவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மார்ச் 19-ந் தேதி மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications