
இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்
இன்று 2வது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. டோணி தலைமையிலான இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

தோல்வியே சந்திக்காத அணி
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமை இந்திய அணிக்கு உண்டு.

சாதக அம்சங்கள்
உலக கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடரில் தென்னாப்ரிக்கா சாதித்ததில்லை என்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். பயிற்சியில் காயம் அடைந்த யுவராஜ் முழு உடல்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றொரு சாதகம்.

இழந்த பெருமையை மீட்குமா?
நியூசிலாந்து தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் ஏமாற்றம் தந்த இந்தியா, 20 ஓவர் உலக கோப்பையை 2வது முறையாக வென்று பெருமை சேர்க்குமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மழை குறுக்கிட்டால்..
இன்றைய போட்டியின் போதும் மழை குறுக்கிட்டால் 2வது பிரிவில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். முதல் பிரிவில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

மழைக்கு 70% வாய்ப்பு..
இன்று அனேகமாக 70% மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வங்கதேச நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இன்றைய போட்டிக்கான டாஸே போடாவிட்டாலும் இந்திய அணி இறுதிக்கு இயல்பாகவே தகுதி பெற்றுவிடும்.


Click it and Unblock the Notifications