
வெறும் 15 ரன்னில் வெற்றி
கிரிக்கெட்டின் தாயகமே இங்கிலாந்துதான். ஆனால் அவர்கள் குடித்த பாலை நேற்று கக்க வைத்து விட்டார்கள் ஆப்கானிஸ்தானியர்கள். அப்படி ஒரு ஆட்டம். நெருக்கடியைக் கொடுத்து இங்கிலாந்தை பிழிந்து விட்டனர். வெறும் 15 ரன் வித்தியாசத்தில்தான் இங்கிலாந்து நேற்று வெற்றி பெற்றது.

மொயீன் அலி இல்லாவிட்டால்
மொயீன் அலி இல்லாவிட்டால் இங்கிலாந்து கஷ்டப்பட்டுப் போயிருக்கும். அவர் சிறப்பாக ஆடி 41 ரன்களைக் குவித்தார். அதேபோல டிவிட் வில்லி 20 ரன்களைச் சேர்த்தார்.

7 விக்கெட்டுக்கு 142
இப்படியாக விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களைச் சேர்த்தது. ஆனால் அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் பேட்டிங் அவர்களை சோதித்து ிட்டது.

கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடுமையாகப் போராடினர். எளிதாக விட்டுக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் முடிந்தவரை ரன் எடுக்க முயற்சித்த பின்னர்தான் அவுட்டாகினர்.

பயமே இல்லை
இங்கிலாந்து பந்து வீச்சை அவர்கள் மிக ஈஸியாக எதிர்கொண்டனர். இதனால் ரன்களும் வந்தவண்ணம் இருந்தன. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 127 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.

சபிக்குல்லாவின் சபாஷ் ஆட்டம்
ஆட்டத்தின் இறுதியில் சபிக்குல்லா 20 பந்துகளில் 35 ரன்களை விளாசி இங்கிலாந்தை மிரள வைத்து விட்டார். ஆனால் அவரது ஆட்டம் போதுமானதாக இல்லை. ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

தொடரிலிருந்து வெளியேற்றம்
ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்று விட்டதால் இந்தத் தொடரிலிருந்து அது வெளியேறுகிறது.. அதேசமயம், விமர்சகர்களின் பாராட்டுக்களுடன்!


Click it and Unblock the Notifications