
அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் சூப்பர்-10 போட்டியில் 126 ரன்களில் நியூசிலாந்தை மடக்கியது இந்தியா. ஆனால், 18.1 ஓவர்களில் 79 ரன்களில் ஆல்-அவுட் ஆகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஸ்பின்னால் சுருண்டது
உலக தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் திடீரென சொதப்ப காரணம், நியூசிலாந்தின் ஸ்பின்னர்கள்தான். மொத்தம் 3 ஸ்பின்னர்களோடு களமிறங்கிய நியூசிலாந்தின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது.

சுழல் சிக்கல்
ஸ்பின்னுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதெல்லாம் பழைய கதை. இப்போது வேகப்பந்தைதான் அதிகம் விளாசுகிறார்கள் இந்திய அணியினர்.

இப்படித்தான் நடந்தது
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை சம்ஹாரம் செய்துவிட்டு வந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிராக உள்ளூர் தொடரின் முதல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தை போலத்தான் சொதப்பி தோற்றது. காரணம், இலங்கையின் ஸ்பின், வேகம் கூட்டணி அப்படி.

9 விக்கெட்டுகள்
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் 9 விக்கெட்டுகள் ஸ்பின்னுக்குத்தான் வீழ்ந்துள்ளன. போனால் போகட்டும் என்ற வகையில், கடைசி விக்கெட்டான ஆஷிஷ் நெஹ்ரா மட்டும், மில்னேயின் வேகப்பந்து வீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

பலே பட்டியல்
நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் மிட்சேல் சான்டர் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் மெக்கல்லம் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்பின்னரான, சோடி 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

சேவாக் சொன்னது தெரியுமா
"ஸ்பின் என்று ஒரு வகை பந்தே கிடையாது.. பந்து பிட்ச் ஆனால்தானே சுழல முடியும். பிட்ச் ஆகும் முன்பே அதை விளாசிவிடுவதுதான் எனது பாலிசி" என்று இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ஒருமுறை கூறியதை டோணி அன்டு கோ தற்போது நினைவில் வைத்தால் நலம்.


Click it and Unblock the Notifications











