
சிறப்பான டீம்
இதுகுறித்து தில்ஷன் கூறுகையில் மிகச் சிறப்பான முறையில் கடமையாற்றும் வீரர்கள் எங்களது அணியில் நிறையவே உள்ளனர். அவர்களால் எதையும் சாதிக்க முடியும்.

யாராக இருந்தாலும் வெல்வோம்
எங்களுக்கு எதிரில் யார் நின்றாலும் கவலை இல்லை. எந்த அணியாக இருந்தாலும்,யாராக இருந்தாலும் எங்களால் அவர்களை வீழ்த்த முடியும். எங்களது பிராண்ட் கிரிக்கெட எங்களை விட்டுப் போகவில்லை.

சீனியர்கள் பார்த்துக் கொள்வார்கள்
எந்த அணியாக இருந்தாலும் அதில் சீனியர்கள் இருப்பார்கள். அவர்கள் இருக்கும் வரை யாருக்கும் கவலை கிடையாது. யார் ஆட்டத்தைத் தொடங்கினாலும் சரி, அதை சிறப்பாக முடிக்க வேண்டியது அவசியம்.

தொடர்ந்து ஆடுவேன்
எனக்கு 40 வயதாகப்போவது பெரிய செய்தி அல்ல. நான் தொடர்ந்து விளையாடும் தகுதியில் இருக்கிறேன். அதுதான் முக்கியம். நான் ஓய்வு குறித்து நினைத்துப் பார்க்கவில்லை. தொடர்ந்து எனது பேட்டிங்கை ரசித்து அனுபவித்து வருகிறேன்.

ஒரு நாள் ஓய்வு பெறுவேன்
இருப்பினும் ஒரு நாள் நானும் ஓய்வு பெறுவேன். அந்த நாள் எப்போது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு அது இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றார் தில்ஷன்.

தொடர் தோல்விக்குப் பின் வெற்றி
இலங்கை அணி சமீபத்தில் பல தோல்விகளைச் சந்தித்து விட்டது. ஆசியாக் கோப்பையில் 3 தோல்விகளைச் சந்தித்து. இந்தியாவில் டி 20 தொடரை இழந்தது. வார்ம் அப் போட்டிகளிலும் அது 2 தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











