டெல்லி: WPL 2026 மெகா ஏலத்தில் ஆஷா ஷோபனா, யுபி வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், தனது முந்தைய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து மாறி, புதிய சீசனில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.அனுபவம் வாய்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஆஷா ஷோபனாவை, யுபி வாரியர்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இது அவரது முந்தைய ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தது. WPL 2023 சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2024 ஆம் ஆண்டில், யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.

WPL வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த முதல் ஐந்து விக்கெட் சாதனை இதுவாகும். இதன் மூலம், 33 வயதில் இந்திய டி20 அணியில் அவருக்கு அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. 15 கால போராட்டத்திற்குப் பிறகு, WPL தான் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமனாகவும், முக்கிய சுழற்பந்து வீச்சாளராகவும் அவர் திகழ்கிறார்.
புதிய அணியில் இணைந்த பிறகு, ஆஷா மைக்கேலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் இருப்பதாகவும், தனது வாழ்க்கையை மேம்படுத்திய முன்னாள் அணிக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் ஆர்சிபிக்கு க்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்."
"முதல் ஆண்டில் ஆர்சிபி என்னை தேர்வு செய்யும் வரை நான் எந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன். மேலும் யுபி வாரியர்ஸ் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் காயம் மற்றும் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வருகிறேன். எனது திறன்களையும் உடற்தகுதியையும் மேம்படுத்த நான் கடினமாக உழைத்தேன்."
"நான் பேட்டிங் வரிசையில் மேலே வர முடியும் என்று அணி நிர்வாகம் நினைத்தால், நான் தயாராக இருக்கிறேன். அணிக்கு என்ன தேவைப்பட்டாலும் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்," என்று ஆஷா ஷோபனா உறுதியளித்தார். தனது உடற்தகுதியை மீட்டெடுக்க கடுமையாக உழைத்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மருத்துவர்கள் மற்றும் பிசியோக்களுக்கும் ஷோபனா நன்றி தெரிவித்தார்.