லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாப்பிரிக்க வென்றதும், அந்த அணியின் வீரர்கள் லண்டன் லார்ர்ட்ஸ் பால்கனியில் குதித்து கொண்டாடினர். அதன் பிறகு, வீரர்கள் அனைவரும் மைதானத்திற்குள் வந்து கொண்டாடினர்.
இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து கண்ணீர் மல்க பேசிய கேசவ் மகாராஜ், "இது மிகவும் சிறப்பானது, இங்கு மற்றும் நாட்டில் உள்ள அனைவருக்காகவும் இந்தக் கோப்பையை வென்றது பெருமையளிக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக நாம் ஒரே மனதாக இணைந்திருந்தோம், இதுதான் நம் நாட்டின் உண்மையான பண்பு.

ஒரு அணியாக, ஒரு நாடாக, பெருமைமிக்க நாட்டவர்களாக இணைந்து விளையாடினோம். நான் பேட்டிங் செய்ய வந்திருந்தால், இந்த உணர்ச்சிகள் என்னை சரியான பாதையில் தூண்டியிருக்கும். எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. கஷ்டங்களிலும் நாங்கள் உறுதியாக நின்றோம். எங்களுக்கு முன் வந்தவர்களை மதிக்கிறோம், இது எதிர்காலத்தில் மேலும் பெரிய வெற்றிகளுக்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்." என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய லுங்கி நகிடி,"இப்போது என்னால் பேச முடியவில்லை. முந்தைய மாலை எனது பந்துவீச்சு ஆட்டத்தை உடைக்கும் தருணமாக இருந்தது. உற்சாகம் என்னை முன்னோக்கி இழுத்துச் சென்றது. இப்போது அதிகம் பேச முடியவில்லை. எங்கள் அணியினரின் சாதனையை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது உணர்ச்சிகரமான தருணம், என் இரத்த அழுத்தம் கூட உயர்ந்திருக்கிறது என்றார்
இந்த வெற்றி குறித்து பேசிய மார்கோ யான்சன்,"என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் வெற்றி பெற்றோம். ஆடுகளத்தில் நிறைய பதற்றம் இருந்தது, பலர் அமைதியாக இருந்தனர். ஆனால், ஒவ்வொரு ரன்னுக்கும் கூட்டம் ஆரவாரித்தது, இதைவிட வேறு எதையும் கேட்க முடியாது. மார்க்ரமின் ஆட்டம் அபாரமானது, அவரும் தெம்பாவும் எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இது கனவுகளால் ஆன தருணம். என்றார்.
இது குறித்து பேசிய டேவிட் பெடிங்ஹாம்,
"அற்புதமான தருணம். மிகவும் பதற்றமாக இருந்தேன், ஆனால் ஏய்டன் டன் மற்றும் தெம்பாவின் ஆட்டம் எங்களை அமைதிப்படுத்தியது. இறுதியாக வெற்றி கோட்டைத் தொட்டதற்கு நன்றி. வெயிலின் தாக்கம் ஆடுகளத்தை மாற்றியது. நாங்கள் சற்று சாதகமான சூழலில் விளையாடினோம். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றியை அடைந்ததற்கு மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். என்றார்
வெற்றி குறித்து பேசிய கைல் வெர்ரேய்ன், "இப்போது நிம்மதியாக உணர்கிறேன். காலையில் ஆட்டத்தைப் பார்த்தபோது, 'நான் பேட்டிங் செய்ய வேண்டாம்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால், மைதானத்திற்கு சென்றபோது, இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றமாக உணர்ந்தேன். வெற்றி மிகவும் முக்கியமானது. மைதானம் முழுவதும் பாடல்களைப் பாடி கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. இப்போது சற்று உணர்ச்சிவசப்படுகிறேன். இது அற்புதமான தருணம். என்றார்.