பவுலிங் தேர்வு
இங்கிலாந்தில் தற்போது சற்று வெயில் அடித்து வந்தாலும், போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. அவ்வப்போது மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிகிறது. இதனால் சவுத்தாம்டன் பிட்ச் ஈரப்பதம் நிறைந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். பிட்ச்-ல் ஈரப்பதம் இருந்தால் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
நீடிக்கும் குழப்பம்
இதனால் நியூசிலாந்து அணியில் 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் ஜடேஜாவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டு 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜிங்கியா ரஹானே கருத்து
இந்நிலையில் இந்த குழப்பங்கள் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஹானே, இங்கிலாந்தின் வானிலை எப்படி இருக்கும் என கணிக்க முடியாததாக உள்ளது. இதனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து இதுவரை எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. இந்திய அணிக்கு இன்னும் 2 பயிற்சி ஆட்டங்கள் உள்ளது. பிட்ச் எந்த மாதிரியான பிட்ச் அமைக்கப்படுகிறது என்பது தெரிந்த பிறகு தான் இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்யும்.
கூடுதல் பேட்ஸ்மேன்?
இங்கிலாந்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிட்ச்-ன் தன்மையால் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சிரமப்படும் போது, போட்டியின் முடிவை பேட்ஸ்மேன்கள் தான் தீர்மானிப்பார்கள் எனக்கூறியுள்ளார். ரஹானே பேட்டிங் தான் முக்கியம் எனக்கூறியுள்ளதை பார்த்தால் அணியின் ப்ளேயிங் 11ல் கூடுதலாக மேலும் ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.