ரொனால்டோ செயல்
ஈரோ 2020 கால்பந்துப் போட்டித் தொடர் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று லிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜூவன்டஸ் அணி சார்பில் ஆடும் ரொனால்டோ கலந்துக்கொண்டார். அப்போது அவர், திடீரென தன் முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தண்ணீரை குடிக்கும்படி அறிவுறுத்தினார்.
கோகோ கோலாவுக்கு பெரும் இடி
ரொனால்டோவின் இந்த செயல் உலக முழுவதும் மிகப்பெரும் பேசுப்பொருளானது. இதுமட்டுமல்லாமல் அவரின் இந்த செயலால் கோகோ கோலா நிறுவனத்திற்கு சுமார் ரூ.29,000 கோடி வரை ஒரே நாளில் நஷ்டம் ஏற்பட்டது. இவரை தொடர்ந்து மேலும் சில கால்பந்து வீரர்களும் கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கி வைத்தனர்.
ப்ரஸ் மீட்
இந்நிலையில் ரொனால்டோவின் ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அப்படி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விராட் கோலியின் முன்பும் கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனை அவர் ரொனால்டோவை போலவே ஓரம் கட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவுமே செய்யவில்லை. எனினும் அதனை எடுத்தும் அவர் குடிக்கவில்லை.
ரசிகர்கள் ஆதங்கம்
ரொனால்டோவின் ரசிகர் எனக்கூறி கொள்ளும் இந்திய கேப்டன் விராட் கோலி, ஏன் ரொனால்டோ கூறிய ஒரு விஷயத்தை பின்பற்றவில்லை என நெட்டிசன் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். எனினும் மற்றொரு பக்கம் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கோகோ கோல நிறுவனம் முக்கிய ஸ்பான்சராக இருந்து வருகிறது. எனவே அதனை சீண்டினால் தனக்கு விளம்பர ஒப்பந்தங்கள் கிடைக்காதோ என்ற அச்சத்தில் கோலி எதுவும் செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.