
சுவாரசிய சம்பவம்
பல தருணங்களில் பலத்த போட்டியுடன், முட்டல், மோதல் சம்பவங்களும் அரங்கேறும். இது போன்ற சம்பவங்களை கடந்தும், சில சுவாரசியமான, நகைச்சுவையான விஷயங்களும் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் டி 20 பிளாஸ்ட் தொடரில் நடைபெற்றுள்ளது.

பந்தால் தாக்குகிறார்
டுர்ஹாம் மற்றும் யார்க்ஷைர் இடையேயான டி20 ப்ளாஸ்ட் தொடரில் அரங்கேறி உள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டி20 ப்ளாஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் யார்க்ஷைர் விக்கெட் கீப்பர் ஜோனாதன் டாட்டசெல், தமது அணியின் சக வீரர் கேசவ் மஹாராஜை பந்தால் தாக்குகிறார்.
அலறிய வீரர்
எதிர்முனையில் ரன் அவுட்டுக்காக பந்தை வீச, அது மஹாராஜ் மேல் விழுந்தது. அவரது தொடையை பலமாகி தாக்கி வலியால் துடித்து அலறுகிறார். காயம் அடைந்த மஹாராஜ் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டுர்ஹாமுக்கு 147 ரன்களை என்ற இலக்கை யார்க்ஷைர் நிர்ணயித்தது. ஆனால் 132 ரன்களுக்கு டுர்ஹாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்ட நாயகனாக தேர்வு
யார்க்ஷைர் கேப்டன் காட்மோர் 52 ரன்கள் குவித்து அசத்தினார். லீனிங் 39 ரன்கள் குவித்தார். அதிர்த்து ஆடிய டுர்ஹாம் அணியில் ஸ்டிஒ 49 ரன்களையும், ஷார்ட் 29 ரன்களையும் குவித்தனர். ஆனால் யார்க்ஷைரின் ஜாக் ஷட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 11 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











