
6வது இடத்தில் சிஎஸ்கே
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே சிறப்பான வகையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் பட்டியலில் இறுதியில் இருந்த சிஎஸ்கே இதன்மூலம் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிறப்பான வாட்சன்
அணியின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டூ பிளசிஸ் ஆகியோர் ஆட்டத்தை முடித்து வைத்தனர். முன்னதாக ஷேன் வாட்சன் உள்ளிட்டோரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அணியின் முக்கிய தேவையான பௌலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை அணி சந்தித்தது.

தோனி, பிளமிங் காரணம்
ஆயினும் அணியின் முக்கிய வீரர்கள் மாற்றமின்றி தொடர்ந்தனர். இதற்கு அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கே காரணம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள் தைரியமாக இருந்தனர். இந்நிலையில் நாம் நினைத்தபடி அணியில் விஷயங்கள் நடக்காதபோது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு ஆதரவு
அணியின் வீரர்களுக்கு தேர்வு குறித்த பாதுகாப்பை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பாசிட்டிவ்வான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தெந்த பகுதிகளை நாம் மேம்படுத்த வேண்டுமோ அதை மேம்படுத்த வேண்டும் என்றும் வீரர்கள் சிறப்பாக விளையாடும்போது அவர்களின் பின்னால் இருந்து தட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications