தம்பி நீங்க துபாய்ல இருக்கறது ஞாபகம் இருக்கா... ஜடேஜாவிடம் சிஎஸ்கே கேள்வி
துபாய் : யூஏஇயில் வரும் மாதம் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் துபாய் சென்றடைந்துள்ளனர்.
Recommended Video
அவர்கள் அனைவரும் தங்களது ஹோட்டல் அறைகளில் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது அறைகளிலேயே பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை யூஏஇ சென்றடைந்த சிஎஸ்கே வீரர்கள் தற்போது குவாரன்டைனில் உள்ளனர். இதையொட்டி ஹோட்டல் அறைகளில் அவர்கள் இருந்தாலும் அங்கிருந்தே பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாவும் படுத்தவாறே தம்பள்சை கைகளில் பிடித்தபடியும் கால்களை மேலே தூக்கியபடியும் வொர்க் அவுட் பயிற்சி மேற்கொண்டார்.
இந்த பயிற்சியின் போது பிரபலமான மலையாள பாடல் ஒன்று பின்னணியில் இசைத்தபடி காணப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சிஎஸ்கே அணி, மலையாள பாடலுக்கு நீங்கள் பயிற்சி செய்யும்போது நீங்கள் துபாயில் இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா என்று ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications