ஷார்ஜா : அணியின் இளம் வீரர்கள் தன்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று தொடர்ந்து கூறுவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 51 ரன்களை குவித்து பஞ்சாப் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளார் கெயில்.

இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது.
நேற்றைய ஐபிஎல்லின் 46வது போட்டியில் கேகேஆர் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதையடுத்து அந்த அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெற அந்த அணி மும்முரம் காட்டி வருகிறது.
நேற்றைய போட்டியில் மன்தீப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரின் அதிரடி அரைசதம் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ் கெயில், அணி மற்றும் தன்னை குறித்து சிறப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அணியின் இளம் வீரர்கள் தன்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.