சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்களை முன்னிட்டு சிட்னியில் இந்திய அணியினர் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சிகளை ஒருபுறம் செய்தாலும் தங்களை உற்சாகத்துடன் வைத்துக் கொள்வதிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பந்துடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் சஹல் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இஷுரு உதானா சஹலை கலாய்த்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் வரும் 27ம் தேதி துவங்கி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கென சிட்னியில் குவாரன்டைனில் உள்ள இந்திய வீரர்கள் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பந்துடன் பிட்னஸ் பயிற்சி மேற்கொண்ட யுஸ்வேந்திர சஹல் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இப்படியா பண்ணுவாங்க? கட்டுப்பாட்டை இழந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த கேப்டன் கோலி!
இந்த புகைப்படத்தை பார்த்த இஷுரு உதானா, அவருடைய உயரத்தை கலாய்க்கும் விதமாக, பாஸ் உங்களுக்கு அந்த சீட் மிகவும் பெரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். குறைந்த ஓவர்கள் தொடர்களில் இடம்பெற்றுள்ள சஹல், அதற்கென தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.