uzvendra chahal Wife : இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளராக சாஹல் இருந்தார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் டி20 போட்டிகளில், ஸ்டார் வீரர் என பல பெருமைகளை சாஹல் பெற்றிருந்தார். ஆனால் தற்போது அவர் இந்திய அணியில் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அண்மையில் கூட பிசிசிஐ அவருடைய ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை நீக்கியது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இதனால் சாகல் தற்போது சோகத்தில் இருக்கிறார். சாகலின் இந்த பின்னடைவுக்கு காரணம் அவருடைய மனைவியின் ஆட்டம் தான் என்று கூறப்படுகிறது. மனைவி வந்த பிறகு கணவனுக்கு ஏற்றம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு சாஹலுக்கு சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது. மனைவி தனுஸ்ரீ சாகலின் நண்பர்களுடன் மிகவும் நெருங்கி பழகுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது.
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ், சாகலின் மனைவி உடன் மிகவும் நெருக்கம் காட்டுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. இதனை சாஹல் தட்டிக் கேட்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வலம் வந்தன. இந்த நிலையில் மீண்டும் தனுஸ்ரீ சாகலும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மும்பையில் ஒரு பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் சாகலும் அவருடைய மனைவியும் சென்றிருக்கிறார்கள்.
அப்போது பிரார்த்திக் என்ற நடன இயக்குனர் உடன் சாகலின் மனைவி மிகவும் நெருக்கம் காட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நடன இயக்குனர் சாஹலின் முன்பே அவருடைய மனைவியை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்திருக்கிறார். இதற்கு சாகலின் மனைவியும் எந்த ஒரு தடையும் சொல்லாமல் நெருக்கம் காட்டி இருக்கிறார்.
மேலும் அந்த நடன இயக்குனர் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்தவுடன் பலரும் மனம் நொந்து போனார்கள். இதில் ஹைலைட்டே இந்த நிகழ்ச்சியில் சாகலும் பங்கேற்று இருந்தார் என்பதுதான். சாஹல் கண்களுக்கு முன்பே இவ்வாறு சேட்டையில் பிரார்த்திக்கும் சாகலின் மனைவியும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக பிரபலங்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சாகலின் மனைவி இவ்வாறு செயல்படுவது முறை அல்ல என்றும் சாகல் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் அவருடைய மனைவியை விவகாரத்து செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.