
கவுரவப்பிரச்சினை
மற்ற நாட்டு ரசிகர்கள் இதனை சகஜமான வெற்றியாக பார்த்தாலும், ஜிம்பாப்வே ரசிகர்கள் இதனை கவுரவமாக பார்த்து வருகின்றனர். இதற்கு காரணம் "மிஸ்டர் பீன்" தான் என்றால் நம்ப முடிகிறதா?. அதாவது கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபல "மிஸ்டர் பீன்" கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சென்றதோ பாகிஸ்தானை சேர்ந்த போலி மிஸ்டர் பீன்.

மிஸ்டர் பீன் காரணம்
நாடக நடிகரான ஆசிஃப் முகமது மிஸ்டர் பீனை போலவே இருப்பார். இவர் ஜிம்பாப்வேவுக்கு சென்று நிகழ்ச்சிக்கான பணத்தையும் பெற்றுச்சென்றார். அவரை நிஜமான மிஸ்டர் பீன் என நினைத்த ஜிம்பாப்வே மக்கள் மற்றும் அரசு உற்சாக வரவேற்பு கொடுத்தது. முக்கிய பிரபலங்களுக்கு தரப்படும் பாதுகாப்புகளும் அவருக்காக கொடுத்திருந்தது. இது எப்படி கிரிக்கெட் போட்டிக்குள் வந்தது என நினைக்கலாம்.

என்ன காரணம்
ஜிம்பாப்வேவை சேர்ந்த ரசிகர் ஒருவர், ஜிம்பாப்வே மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம் என ட்வீட் செய்தார். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் " முடிந்தால் செய்து பாருங்கள்" என சவால் விடுக்க, பிரச்சினை வெடித்தது.

ஜிம்பாப்வே அதிபர் ட்வீட்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தலையிட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் போட்ட அவர், " ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி; வீரர்களுக்கு வாழ்த்துக்கள், அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என பாகிஸ்தானை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சாரிஃப்-ம் பதிலடி கொடுத்துள்ளார்.

பாக். பிரதமர் பதிலடி
அந்த ட்வீட்டற்கு ரிப்ளை போட்ட அவர், எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிஜமான கிரிக்கெட் வெறி இருக்கிறது. பாகிஸ்தானியர்களுக்கு விழுந்தால் பல மடங்கு எழுந்துவிடும் தன்மை அதிகம் இருக்கிறது எனக்கூறி பதிலடி கொடுத்துள்ளார். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











