வார்த்தை வரவில்லை
இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற சிக்கந்தர் ராசா பேசுகையில், மகிழ்ச்சியில் எனக்கு வாயில் வார்த்தை வரவில்லை.போட்டியில் வென்ற பிறகு உற்சாகத்தில் கத்தியதால் என் தொண்டையே வரண்டு விட்டது. நான் எங்கள் அணி வீரர்களின் நினைத்து இப்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை.
சவால் போட்டோம்
எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் செயல்பட்ட விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.நாங்கள் இந்த போட்டியில் வெல்வோம் என நம்பிக் கொண்டிருந்தோம். எங்களுடைய செயல்பாடு குறித்து சொல்ல வார்த்தை வரவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் வரும்போது கேப்டன் எர்வினும் நானும் ஒரு சவால் போட்டுக் கொண்டோம்.
3 வாட்ச் வேண்டும்
அதில் டி20 உலக கோப்பை போட்டிகளில், நீ ஆட்ட நாயகன் விருதை வென்றாய் என்றால் உனக்கு நான் நீ கேட்கும் கைக்கடிகாரங்களை வாங்கி தருகிறேன். அதேபோல் நான் ஆட்டநாயகன் விருது பெற்றால் நீ எனக்கு வாட்ச் வாங்கி தர வேண்டும் என அவரிடம் சவால் போட்டு இருந்தேன். தற்போது நான் அவருக்கு நினைவு கூற விரும்புகிறேன் .அவர் எனக்கு மூன்று வாட்ச்கள் வாங்கித் தர வேண்டும்.
பாண்டிங்கிற்கு நன்றி
நான் போட்டிக்காக எப்போதும் உத்வேகத்துடன் தயாராகிக் கொண்டிருப்பேன். இன்று காலை எனக்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது.அதில் என்னை பற்றி ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசினார். அதை பார்த்தவுடன் என்னுடைய உத்வேகம் மேலும் அதிகரித்து விட்டது. எனக்கு உற்சாகம் அளித்த ரிக்கி பாண்டிங்கிற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் எஞ்சிய போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றி உங்களுடையது.