உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியால் தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை பெரும் லாபத்தை சம்பாதித்துள்ளது. கால்பந்துப் போட்டிகளைப் பார்வையிடவும், உலகக் கோப்பை கோலாகலத்தைக் கண்டுகளிக்கவும் அங்கு இந்த கால கட்டத்தில் இதுவரை 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனராம்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.
இவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்து ரசிகர்கள் ஆவர். இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவே தனியாக ஒரு துறையை தென் ஆப்பிரிக்க அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 10,20,031 பேராகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,19,495 பேராக இருந்தது என்று தென் ஆப்பிரிக்க அரசு கூறியுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]