அடுத்தடுத்து அட்டகாசமான கணிப்புகளைக் கூறி அது உண்மையிலும் நடந்து பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால், கணித்தபடியே இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வென்று விட்டது.
அதேசமயம், நெதர்லாந்து வெல்லும் என கூறியிருந்த சிங்கப்பூர் கிளி மணியின கணிப்பு பொய்த்துப் போய் விட்டது.
உலகம் முழுவதும் ஸ்பெயினே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. இந்த நிலையில் அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என கணித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லினைச் சேர்ந்த ஆக்டோபஸ் பால், இறுதிப் போட்டியில் ஸ்பெயினே எனக் கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியது.
இதனால் வெல்லப் போவது ஆக்டோபஸா, நெதர்லாந்தா என்ற அளவுக்கு நிலைமை மாறிப் போனது. ஆனால் நேற்றைய போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று, ஆக்டோபஸ் பாலை மேலும் பிரபலமாக்கி விட்டது.
அதேசமயம், நெதர்லாந்துதான் வெல்லும் என கணித்திருந்தது சிங்கப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் கிளியான மணி. ஆனால் அது பொய்த்துப் போய் விட்டது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]