
மேலாடையை கழற்றி கொண்டாட்டம்
இதனிடையே கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற போது, அந்நாட்டு ரசிகை ஒருவர் தனது மேலாடையை கழற்றி சுழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கால்பந்து போட்டிகளின் போது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள ரசிகைகளின் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சாதாரண விஷயம் தான்.

கத்தார் அரசு அறிவுறுத்தல்
ஆனால் கத்தார் நாட்டின் சட்டங்களின் படி, பொதுவெளியில் மக்கள் யாரும் தங்களது உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, கால்பந்து ரசிகர்களுக்கு கத்தார் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

பெண்களுக்கு கட்டுப்பாடு
குறிப்பாக பெண் ரசிகைகள் தோளில் இருந்து முழங்கால் வரையில் மறைக்கும் ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும் கால்பந்து ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படவில்லை. குறிப்பாக குரோஷியா ரசிகையான இவானா நோல், குறைந்த ஆடைகளை அணிந்து மைதானங்களில் வலம் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் அர்ஜென்டினா ரசிகை மேலாடையை கழற்றி கொண்டாடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

ரசிகைக்கு சிறை?
இதனால் கத்தார் நாட்டின் சட்டப்படி, அந்த ரசிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இதனிடையே அர்ஜென்டினா ரசிகை விரைந்து கத்தார் நாட்டில் இருந்து வெளியேறுவது நல்லது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications













