ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கவுரமாகும்.
சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு ஒரு நாட்டில் தேவையான வசதிகள் உள்ளதா, வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து தான் போட்டியை நடத்தும் வாய்ப்பு தரப்படுகிறது.
