தொடங்கியது “ஒலிம்பிக்-2016” ஏற்பாடுகள் – வளையங்களை வெளியிட்டது பிரேசில்
ரியோடிஜெனிரோ: பிரேசிலில் 2016ல் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தில் இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான வளையம் தற்போது பிரேசிலில் மையம் கொண்டுள்ளது.
பிரேசில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இதற்காக கப்பல் மூலம் இங்கிலாந்தில் இருந்து பிரமாண்டமான ஒலிம்பிக் வளையம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனை மடுரெய்ரா என்ற பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் நேவல், ரியோ நகர மேயர் மற்றும் அந்நகர மக்கள் ஏராளமானோர் கலந்து இந்த நிகழ்ச்சியில் கொண்டனர். அப்போது வாணவேடிக்கைகால் அந்த பகுதி அதிர்ந்தது.
ஒலிம்பிக் போட்டியை வரவேற்க காத்திருக்கும் பிரேசில் நகர வாசிகள், இந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து கொண்டாடியதுடன் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரேசிலில் 31 ஆவது ஒலிம்பிக் போட்டி 2016 ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications