ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அணி, கோபா அமெரிக்காத் தொடரை விட்டு சீக்கிரமே வெளியேறியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தற்போது அணியின் பயிற்சியாளரான துங்கா நீக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் அணியின் ஒருங்கிணைப்பாளர் கில்மர் ரினால்டியும் நீக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் அணி கோபா அமெரிக்கா போட்டியில் சாதாரண பெரு அணியிடம் 0-1 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்று காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது. இது பிரேசில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்காவின் பதவி பறி போயுள்ளது. புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்னும் பிரேசில் நாட்டு கால்பந்து சங்கம் அறிவிக்கவில்லை.