சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி இரண்டு ஆட்டங்களில் கடைசி நேரத்தில் டிரா செய்ய எதிரணிகளுக்கு வாய்ப்பு கொடுத்ததால் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்த சென்னயின் எப்சி, புனே சிட்டி எதிரான ஆட்டத்தில் அந்த தவறை செய்யாது என்று எதிர்பார்க்கலாம்.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
