சென்னை: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வியடைந்த நிலையில், நாளை நடக்கும் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை சென்னையின் எப்சி. சந்திக்கிறது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் துவங்கியுள்ளது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.
