கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தேர்தல் முடிவு அறிவிப்பு.. வெற்றி பெற்றவர்கள் பட்டியல்!
கோயம்புத்தூர் : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தேர்தல் 24.09.2019 அன்று நடத்தப்பட்டு, அன்றே முடிவும் அறிவிக்கப்பட்டது.
கோவை நேரு ஸ்டேடியத்தில் அமைந்துள்ள கால்பந்து சங்க அலுவலகத்தில் கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது.

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி எம்.தங்கராஜு முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 27 அணிகள் வாக்களித்தனர்.
தேர்தல் நடத்தப்பட்ட அதே நாளில் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தங்கராஜு அவர்களால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இரத்தினம் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் மதன் ஏ செந்தில், கோயம்புத்தூர் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணை தலைவராக எம். தினகரன், கே.ராஜா, கே.ஆர்.வி. ராமசாமி, ஓ. சண்முகசுந்தரம், செயலாளராக டி.கிருஷ்ண மூர்த்தியும்., உதவி செயலாளராக என்.பி. அனில்குமார்., பொருளாளராக டி. சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றதாக நீதிபதி அறிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் 2019 முதல் 2023 வரை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications