
முழங்காலில் ஐஸ் பேக்
இந்த நிலையில் இன்று நடந்த அடுத்த போட்டிக்கான பயிற்சியின்போது பாதியிலேயே ரொனால்டோ வெளியேறி விட்டார். அவரது இடது முழங்காலில் ஐஸ் பேக் வைக்கப்பட்டிருந்த்து.

பாதியில் ரொனால்டோ விலகியதால்
இப்படிப் பயிற்சியிலிருந்து பாதியில் ரொனால்டோ விலகியதால், அவர் தொடர்ந்து ஆட மாட்டார் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து போர்ச்சுகல் அணி நிர்வாகம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

உலகக் கோப்பைக்கு முன்பாகவே
உலகக் கோப்பைக்கு முன்பாகவே, முழங்கால் வலியுடன் ரொனால்டோ விளையாடக் கூடாது. அப்படி விளையாடினால் அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்று அவரது டாக்டர் எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது. அதை மீறித்தான் வந்திருந்தார் ரொனால்டோ.

3வது உலகக் கோப்பை
இது ரொனால்டோவுக்கு 3வது உலகக் கோப்பையாகும். 2006ல் ஜெர்மனியில் நடந்த போட்டியின்போது போர்ச்சுகல் அணி 4வது இடத்தைப் பிடிக்க ரொனால்டோ உதவியிருந்தார். 2010ல் நடந்த போட்டியில் போர்ச்சுகல் அணி ரவுண்ட் 16 சுற்றோடு வெளியேறியது.

2வது போட்டியில் அமெரிக்காவை
தற்போதைய தொடரில் போர்ச்சுகல் அணி தனது 2வது போட்டியில் ஜூன் 23ம் தேதி அமெரிக்காவை சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் ரொனால்டோ விளையாடுவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications













