நாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா இன்று ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. கவர்ச்சிப் பாடகி ஷகீரா, ஜான் லிஜென்ட், ஆஜ்ஜெலிக் கிடிஜோ, அலிசியா கீஸ், பிளாஸ் ஐட் பீஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று ஆடிப் பாடுகின்றனர். இந்த கண்கவர் நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெறுகிறது.
நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.
ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது.
மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன. பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications