இங்கிலாந்து-ரஷ்யா கால்பந்து ரசிகர்கள் பயங்கர மோதல்.. யூரோ தொடரிலிருந்து அணிகளை நீக்க வாய்ப்பு
லண்டன்: ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலாந்து-ரஷியா இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மைதானத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து, ரஷிய நாட்டு ரசிகர்கள், ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன், கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இங்கிலாந்து ரசிகர்களே அதிகமாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்தியது. ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷிய அணிகளை ஐரோப்பிய கால்பந்து தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
Story first published: Monday, June 13, 2016, 8:42 [IST]
Other articles published on Jun 13, 2016


Click it and Unblock the Notifications