சாண்டோஸ் பதவி விலகல்
ஏற்கனவே பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட், பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்டோ மார்ட்டினஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இந்த நிலையில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பதவி விலகியுள்ளார். உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில், மொரோக்கோ அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் தோல்வியடைந்தது.
ரொனால்டோ சர்ச்சை
அதேபோல் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை வெளியே அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். அந்த போட்டியின் போதே ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மொராக்கோவுடன் தோல்வி
குறிப்பாக மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ ஆட்டத்தின் 45வது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் போர்ச்சுகல் அணி தோல்வியையே சந்தித்தது. ஆனால் ரொனால்டோ களமிறங்கிய நேரத்தில் கோல் அடிப்பதற்கான இருந்தது.
புதிய பயிற்சியாளர் யார்?
இதனால் போர்ச்சுகல் அணியின் தோல்விக்கு ரொனால்டோவை களமிறக்காததே காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பெர்னாண்டஸ் சாண்டோஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே போர்ச்சுகல் அணியின் அடுத்த பயிற்சியாளராக ஜோஸ் முரினோ வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.