இங்கிலாந்து அபார வெற்றி
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியே பெரும்பாலான பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து வீரர் ஷாகா அதிகபட்சமாக 2 கோல் அடிக்க, ஸ்டர்லிங், மார்கஷ் ராஸ்ஃபோர்ட், ஜூட் பெல்லிங்கம் மற்றும் ஜொக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஈரான் அணி ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றியது, இதனால் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 6க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பெனால்டி தரவில்லை
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்களது அதிரடியை அதிகப்படுத்தினர். அப்போது, ஈரான் அணியின் கோல் போஸ்ட்க்கு பந்துகளை இங்கிலாந்து வீரர்கள் கடத்தி வந்தனர்.
காயம்
அப்போது பந்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் வீரர் மஜித்தும், கோல் கீப்பர் அலியும் ஓடி வந்த போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதி கொண்டனர். இதில், அலியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் நிலை தடுமாறி, கோல் கீப்பர் அலி கீழே விழுந்தார். இதனையடுத்து, மருத்துவ குழு உடனடியாக வந்து, அவருக்கு வெளியான ரத்தத்தை நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆட்டம் நிறுத்தம்
அலி எழுந்து நின்று மீண்டும் போட்டியில் தொடர அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் என்னால் முடியவில்லை என்று கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மாற்று கோல் கீப்பர் ஹூசைன் களத்திற்கு வந்தார். இதனால் போட்டி 14 நிமிடம் வரை தடைப்பட்டது. இதற்கு ஈடு செய்ய கூடுதல் நேரம் இரு பகுதியிலும் வழங்கப்பட்டது.