
தடை
கடி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஃபீஃபா சுவாரஸ் கால்பலந்து தொடர்பான எந்தஒரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ள 4 மாத தடையும், 9 சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோபம்
அரங்கில் நடந்த விஷயத்திற்காக சுவாரஸ் மீது கோபமோ, அவரை பழிவாங்கும் எண்ணமோ இல்லை. ஆட்டத்தை பற்றிய கோபம் மற்றும் வருத்தம் தான் உள்ளது என்று செலினினி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்
நான் தற்போது லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரை பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சிக்கலான நேரத்தை சந்திக்க வேண்டி உள்ளது என்றார் செலினினி.

அதிகம்
சுவாரஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அதிகம் என்று நினைக்கிறேன். போட்டிகளின்போது அவரது அணியினரை அணுகவாவது சுவாரஸுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என செலினினி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications













