மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் போலந்து அணிகள் மோதுகிறது.
21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கி நடந்து வருகிறது. முக்கியமான பெரிய அணிகள் சொதப்பி வரும் நிலையில் அறிமுக அணிகள் மாஸ் காட்டி விளையாடி வருகிறது. இதனால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகள் மோதுகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத வகையில், இங்கிலாந்து அணி உலகக் கோப்பை போட்டியை வெற்றியோடு தொடங்கியுள்ளது. இந்த வருடம் அந்த அணி மிகவும் வலுவாக காணப்படுகிறது.
அந்த அணியின் ஹாரி கேன் மிகவும் அதிக அளவில் நம்பிக்கை அளிக்கிறார். சென்ற முறை போல இல்லாமல் இந்த முறை இங்கிலாந்து கோல் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பனாமா வித்தியாசமான திட்டங்களுடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து அளவிற்கு அந்த அணிக்கு வேகம் இல்லை என்றாலும் கடைசி நேரத்தில் அந்த அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிர்ச்சி அளிக்கலாம். இதனால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியில் இன்று ஜோர்டன், வால்கர், ஸ்டோன்ஸ், ஹாரி, ட்ரிப்பேர், ரூபென், ஹெண்டர்சன், ஜெசி, ஆஸ்லி எங், மார்க்ஸ், ஹாரி கேன் விளையாட வாய்ப்புள்ளது.
பனாமா அணியில் இன்று ஜெய்ம், ரோமன், பிடல், மைக்கேல், எரிக் டேவிஸ், கேப்ரியல் கோமஸ், அனிபால், அர்மாண்டோ, எட்கர்,ஜோஸ், பிளாஸ் பெரிஸ் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.