புளோம்போன்டெய்ன்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்தாலி -பராகுவே ஆட்டம் டிராவில் முடிந்து போனதால் இத்தாலி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.எப் குரூப்பில் இடம் பெற்றுள்ள இத்தாலியும், பராகுவேயும் நேற்று மோதின. இந்தப் போட்டி அனல் பறக்க நடந்தது. இரு அணிகளும் மிகக் கடுமையாக கோலுக்கு மோதின. நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற மகா சூடான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என்ற பெயரை இந்தப் போட்டி பெற்று விட்டது.முதல் பாதி ஆட்டத்தில் அட்டாக்கில் இறங்கினர் இத்தாலி வீரர்கள். இதனால் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. மண்டோலிவாவுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் தோல்வியில் முடிந்தன அவை.அதேபோல பராகுவேயும் பதில் தாக்குதலில் இறங்கியதால் போட்டி படு டைட் ஆகிப் போனது.இந்த நிலையில் 38வது நிமிடத்தில் பராகுவேயின் அல்கராஸ் ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார்.2வது பாதி ஆட்டமும் அதே விறுவிறுப்புடன் போனது. ஆட்டத்தின் 63வது ஆட்டத்தில் டி ரோஸ்ஸி ஒரு கோலடித்து இத்தாலிக்கு நிம்மதி கொடுத்தார்.ஆனால் அதன் பிறகு கோல் ஏதும் போட முடியவில்லை. கடைசி சில நிமிட ஆட்டம் காணக் கண் கொள்ளாததாக இருந்தது. படு ஆக்ரோஷமாக இருந்த அந்த தருணங்களில் கோலடித்து விட இரு அணிகளும் கடுமையாக முயன்றன. இருப்பினும் இருவரது முயற்சிகளும் பலிக்கவில்லை. போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.