அர்ஜென்டினா : சர்வதேச கால்பந்து விளையாட்டில் முடி சூடா மன்னனாக விளங்குபவர் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி. மெஸ்ஸி இதுவரை பெரிய அளவில் எந்த சர்ச்சையிலுமே சிக்கியது கிடையாது. ஒரு நல்ல வீரர் என்ற இமேஜை எப்போதுமே மெஸ்ஸி கடைப்பிடித்து வருவார்.
இந்த நிலையில் மெஸ்ஸி உடன் அர்ஜென்டினா மாடல் குன்சால் என்ற பெண் , அந்தரங்க உறவில் இருந்ததாக கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதில் மெஸ்ஸி தம்மை 2011 ஆம் ஆண்டு சந்தித்ததாகவும், அப்போதே அவர் ஸ்டார் வீரராக இருந்ததால் அவரை சந்திக்க தாம் ஆசைப்பட்டதாகவும் அந்த மாடல் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது மெஸ்ஸி மிகவும் இளம் வீரர். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாமல் இல்லை. அவர் மைனர் அல்ல. அது அனைவரும் கவனிக்க வேண்டியது.
மெஸ்ஸியின் பாதுகாவலர்கள் தான் முதலில் என்னை வந்து அழைத்தார்கள். உங்களை ஒருவர் தனியாக சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என என்னை அந்த பாதுகாவலர் அழைத்தார். என்னை யார் சந்திக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்ற ஆச்சரியத்தில் நான் சென்றேன். அங்கு பார்த்தால் மெஸ்ஸி நின்று கொண்டிருந்தார்.
தன்னுடைய பாதுகாவலரை வைத்து என்னை அழைக்க சொன்னார் என்று கோபம் முதலில் எனக்கு இருந்தது. ஆனால் பிறகு தான் தெரிந்தது மெஸ்ஸி மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார். இதை எடுத்து நாங்கள் இருவரும் அவருடைய வீட்டிற்கு சென்றோம். அப்போது நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம்.இசை குறித்து இருவருமே பேசிக் கொண்டிருந்தோம். மெஸ்ஸி கால்பந்து களத்தில் எப்படி விளையாடுவார் என்று தெரியும்.
ஆனால் அந்த தருணத்தில் அவர் எதையுமே செய்யவில்லை. அவரின் திறமையை என்னிடம் காட்டுவார் என்று நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் ஆக ஆக நான் ஒரு சடலத்துடன் நேரத்தை கழித்தது போல் எனக்கு இருந்தது என்று அந்த மாடல் கூறியிருந்தார்.இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த மாடல் பேசியது அது தற்போது இணையத்தில் மீண்டும் சுற்றி வருகிறது.