ஜோஹன்னஸ்பர்க்: ஜோஹன்னஸ்பர்க்கில் நைஜீரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நடந்த பயிற்சி ஆட்டத்தைப் பார்க்க பெருமளவில் ரசிகர்கள் நெருக்கி அடித்ததால், நெரிசல் ஏற்பட்டு 16 பேர் காயமடைந்தனர்.
நைஜீரிய வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க திரண்ட ரசிகர்கள் இவர்கள். இந்த நெரிசல் சம்பவத்தில் 2 போலீஸாரும் காயமடைந்தனர்.
போட்டி நடந்த மெகுலாங் ஸ்டேடியத்திற்கு பெரும் திரளான நைஜீரிய ரசிகர்கள் வந்திருந்தனர். தங்களது அபிமான ரசிகர்கள் விளையாடுவதைப் பார்க்க அவர்கள் முண்டியடித்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்தப் போட்டியைக் காண அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்ததால்தான் பெரும் திரளானவர்கள் கூடி விட்டனர்.
சிறிய அளவிலான கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியாமல் தென் ஆப்பிரிக்க போலீஸார் திணறிய விதம் போட்டி அமைப்பாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்.
இந்தப் போட்டியில், நைஜிரிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]