ரொனால்டோவால் வெடித்த சர்ச்சை
நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான முக்கிய போட்டிகளில் ரொனால்டோ விளையாடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் ரொனால்டோ கூறுகையில், பயிற்சியாளர் எரிக் டென் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என தனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்துவிட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறியது சர்ச்சையாகியது.
ரொனால்டோ கருத்து
இதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து ரொனால்டோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், உலகக்கோப்பை போர்ச்சுகல் நாட்டிற்காக வெல்வதற்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
கவலையில்லை
நான் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் எரிக் டென் பற்றி பேசிய கருத்துக்கள் போர்ச்சுகல் அணியை ஓய்வறையை பாதிக்குமா என்பது பற்றி கவலையில்லை. எனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன். எனது அணியினருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.
வேண்டுகோள்
போர்ச்சுகல் அணி களமிறங்குவதற்கு அதீத பசியுடனும், கவனத்துடனும் உள்ளது. அதனால் எனது நேர்காணல் எங்கள் அணியை கவனத்தை பாதிக்க வாய்ப்பில்லை. அதேபோல் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வரும் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் உடனான நட்பு சிறப்பாகவே உள்ளது. எந்தப் பிரச்சினையும் அணியில் இல்லை என்று தெரிவித்தார். இறுதியாக தன்னை பற்றி பேசுவதை நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.