கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.... இந்திய அணி அசத்தல்!
டெல்லி: ஸ்பெயினில் நடக்கும் கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் ஆறு முறை 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா அசத்தியுள்ளது.
கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்றது.

ஆறுமுறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள, மிகவும் வலுவான அணியான அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது.
இந்தத் தொடரில் முர்சியாவிடம் 2-0, மொரிடினியாவிடம் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. வெனின்சுலாவுக்கு எதிரான கடைசி ஆட்டம் கோல் அடிக்காமல் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் உலகின் மிகவும் வலுவான அணியான அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் தாங்க்ரி 4வது நிமிடத்தில் அன்வர் அலி 68வது நிமிடத்திலும் கோலடிக்க இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.


Click it and Unblock the Notifications