இன்று முக்கிய ஆட்டம்.. கோவாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசிக்குமா சென்னையின் எப்.சி?
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, எஃப் சி கோவா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி உடனான ஆட்டத்தை சமன் செய்தது. இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் சொந்த மைதானத்தில் இன்று களமிறங்குகிறது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய கோவா அணி, இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
Story first published: Thursday, October 13, 2016, 16:32 [IST]
Other articles published on Oct 13, 2016


Click it and Unblock the Notifications